• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-08-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தண்டனைச் சட்டக்கோவையிலுள்ள குற்றங்கள் சம்பந்தமாக தண்டப்பணத்தை அதிகரித்தல்
- நாட்டில் குற்ற நடவடிக்கைகள் தொடர்பிலான நிகழ்வுகள் பாரிய அளவில் அதிகரித்துள்ளமையினால் அதற்கெதிராக கடும் நடவடிக்கைகளை எடுப்பது காலத்தின் தேவையாகும். ஆதலால், சில சட்டங்கள் மற்றும் கட்டளைச் சட்டங்களிலுள்ள ஏற்பாடுகளை மீறுவது தொடர்பில் விதிக்கப்பட்ட தண்டப்பணம் அதனை தடுப்பதற்கு எந்த வகையிலும் போதுமானதாக இல்லையென்பது பற்றி ஆராய்ந்து சிபாரிசுகளை சமர்ப்பிப்பதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் சிபாரிசுகளுக்கு அமைவாக தண்டனைச் சட்ட கோவையில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றங்கள் சம்பந்தமாக தண்டத்தொகையை அதிகரிப்பதற்கு சட்டங்களை வரையுமாறு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.