• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-08-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை பல் மருத்துவ சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்படும் 42 ஆவது ஆசிய பசுபிக் பல் மருத்துவ மாநாடும் கண்காட்சியு
- இலங்கை பல் மருத்துவ சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்படும் 42 ஆவது ஆசிய பசுபிக் பல் மருத்துவ மாநாடானது 2020 ஆம் ஆண்டு யூன் மாதம் 09 ஆம் திகதியிலிருந்து 13 ஆம் திகதிவரை பண்டாரநாயக்க ஞாபகார்த்த சருவதேச மாநாட்டு மண்டபத்தில் நடாத்தப்படுவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. அமெரிக்கர்கள், ஆசியர்கள், ஐரோப்பியர்கள் மற்றும் பசுபிக் பிராந்திய நாடுகளின் பலவற்றிலும் உள்ளவர்களும் உள்ளடங்கலாக பல்சார் தொழில்வாண்மையாளர்கள் மற்றும் நிபுணர்கள் இந்த மாநாட்டில் பங்குபற்றுவதற்கு எதிர்பார்க்கப்படுவதுடன் பல் உபகரணங்கள் மற்றும் சுகாதார பாதுகாப்பு சாதனங்கள் என்பவற்றின் உலக பிரசித்தமான உற்பத்தியாளர்கள் மற்றும் வழங்குநர்களின் பங்குபற்றலுடன் சருவதேச பல்சார் வியாபார கண்காட்சியும் இந்நிகழ்விற்கு ஒருங்கிணைவாக நடாத்தப்படும். அதற்கிணங்க, கூறப்பட்ட மாநாட்டையும் கண்காட்சியையும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வொன்றாக பிரகடனப்படுத்துவதற்கும் இந்த நோக்கத்திற்கான ஏற்பாடுகளை பெற்றுக் கொள்வதற்கும் சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.