• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-08-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கைக்கும் மாலைத்தீவிற்கும் இடையில் செய்து கொள்ளப்படும் புரிந்துணர்வு உடன்படிக்கை
- இவ்விரு நாடுகளுக்கு இடையிலும் நட்புறவையும் பரஸ்பர ஒத்துழைப்பையும் மேலும் விரிவாக்கிக் கொள்ளும் நோக்குடன், இலங்கையின் அரச மற்றும் அரசசார்பற்ற துறைகளுடன் இணைந்த உயர்கல்வி வாய்ப்புக்களை விரிவாக்குவதன் ஊடாக நாட்டிற்கு அந்நியச் செலாவணியை பெற்றுக் கொள்வதற்கும், தெற்காசிய பிராந்தியத்திற்குள் இலங்கையின் உயர்கல்வி வாய்ப்புக்களை விரிவாக்குவதற்காகவும், அத்துடன் மாலைதீவில் நீர்வழங்கல் துறை பற்றிய நிபுணத்துவ பொறியியல் அறிவினை முதலிடுவதற்கு ஊடாக நன்மைகளைப் பெற்றுக் கொள்வதற்கும், பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களின் 2019 செப்ரெம்பர் மாதத்திற்கான மாலைதீவுக்கான விஜயத்தின் போது, உயர்கல்வி மற்றும் நீர்வழங்கல் துறைகள் என்பவற்றின் நோக்கங்கள் கருதி இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசிற்கும் மாலைதீவு குடியரசிற்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடும் பொருட்டு நகர திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.