2019-08-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
பதுளை ஹாலிஎல எல்ல ஒன்றிணைந்த நீர்வழங்கல் கருத்திட்டத்தின் தெமோதர ரெஸ்குரு நீர்த்தேக்கத்தை நிர்மாணிப்பதற்காக காணி சுவீகரிக்கப்பட்டமையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குதல் - பதுளை ஹாலிஎல எல்ல ஒன்றிணைந்த நீர்வழங்கல் கருத்திட்டத்தின் தெமோதர ரெஸ்குரு நீர்த்தேக்கத்தை நிர்மாணிப்பதற்காக காணி சுவீகரிக்கப்பட்டமையினால் பாதிக்கப்பட்ட உரிய காணிகளுக்கான உறுதிகளைக் கொண்ட ஐந்து (05) குடும்பங்கள் சார்பில் முன்னர் குடியிருந்த வீட்டின் மீளமைப்புச் செலவின் அடிப்படையில் நட்டஈட்டுக் கொடுப்பனவொன்றையும் அவர்கள் முன்னர் குடியிருந்த காணியின் நிகழ்கால சந்தை பெறுமதியின் அடிப்படையில் நட்டஈட்டையும் செலுத்துவதற்கும் அத்துடன் மேற்போந்த ஐந்து (05) குடும்பங்களையும், காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்குச் சொந்தமான காணிகளில் அத்துமீறி குடியேறிய பதினைந்து (15) குடும்பங்களையும் உள்ளடக்கி இருபது (20) குடும்பங்கள் சார்பில் வழங்கப்பட்ட மாற்றீடான காணிகளுக்கு உரிமைமாற்ற அனுமதியை அல்லது உரிமப்பத்திரமொன்றை காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் வழங்குவதற்கும் நகர திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |