• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-08-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வேமெடில்ல நீர்த்தேக்கத்திற்குள் மூழ்கடிக்கப்பட்ட காணிகளுக்கு பதிலாக வழங்கப்பட்ட காணிகள் மொறகஹகந்த திட்டத்திற்கென சுவீகரிக்கப்பட்ட மையினால் பாதிக்கப்பட்டோருக்கு நட்டஈடு செலுத்துதல்
- கந்தேபிட்டவல கருத்திட்டத்தின் கீழ் 2008 ஆம் ஆண்டில் நாவுல்ல, கலேவெல மற்றும் தம்புள்ள பிரதேச செயலகப் பிரவுகளுக்குள் நடைமுறைப்படுத்தப்படும் வேமெடில்ல நீர்த்தேக்கத்திற்கான காணிகளை சுவீகரித்தல் காரணமாக தமது ஆதனங்களை இழந்திருந்த மக்களுக்கென வழங்கப்பட்ட மாற்றுக் காணிகளை உள்ளடக்கும் காணிப் பரப்பானது அதன் பின்னர், மொறகஹகந்த. களுகங்க அபிவிருத்தி கருத்திட்டத்தின் செயற்பாடுகள் கருதி அரசாங்கத்தினால் சுவீகரிக்கப்பட்டுள்ளது. ஆதலால், மேற்கூறப்பட்டவாறு, தமது காணிகளை இழந்தமை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள அத்துடன் தமது காணிகளின் இழப்பிற்கான மாற்றீடாக இழப்பீட்டுக் கொடுப்பனவை பெற்றுக் கொண்டிராத மீதமுள்ள 4 காணி உரிமையாளர்களுக்கு தலா 14 இலட்சம் ரூபா வீதம் இழப்பீட்டை செலுத்தும் பொருட்டு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.