2019-08-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
திறந்த அரச கூட்டு பங்காண்மையின் கீழ் வௌிப்படையான நீதி பற்றிய கூட்டணியின் தொடக்க உறுப்பினர் ஒருவராக இலங்கையை உள்ளடக்குதல் - திறந்த அரச கூட்டு பங்காண்மையின் உறுப்பினராக இலங்கையானது தற்போது அதன் இரண்டாவது திறந்த அரச கூட்டு பங்காண்மையின் தேசிய செயல் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் செய்முறையிலுள்ளது. தமது பிரசைகளின் நன்மை கருதி நீதியுடன் தொடர்புபட்ட மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்துவதற்கு திறந்த அரச கூட்டு பங்காண்மை உறுப்பு நாடுசார் ஆற்றலை அதிகரிக்கும் குறிக்கோளுடன் 'வௌிப்படையான நீதி பற்றிய கூட்டணி' ஒன்றை ஆரம்பிப்பதற்கு திறந்த அரச கூட்டு பங்காண்மை செயலகமானது முறைசார்ந்த ரீதியில் திட்டமிட்டுள்ளது. இது குறித்து, இக்கூட்டணியின் தொடக்க உறுப்பினர்களாக ஆகுவதற்கு திறந்த அரச கூட்டு பங்காண்மை அரசாங்கங்களுக்கு அழைப்பொன்றை திறந்த அரச கூட்டு பங்காண்மை செயலகம் விடுத்துள்ளது. அதற்கிணங்க, கூறப்பட்ட கூட்டணியின் தொடக்க உறுப்பினர் ஒருவராக இலங்கை இணையும் பொருட்டு நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |