2019-08-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
மிஹிந்தலை உலக மரபுரிமை பிரதேசத்தை விருத்தி செய்தல் - அநுராதபுரம் இரவில் தங்கும் சுற்றுலா பயண முடிவிடமொன்றாக மேம்படுத்துவதற்கு மிஹிந்தலை உலக மரபுரிமை பிரதேசத்தை அபிவிருத்தி செய்தல், புனரமைத்தல், ஒளியூட்டுதல் என்பன பொருட்டு 275 மில்லியன் ரூபா (வரியின்றி) செலவில் வரையறுக்கப்பட்ட இலங்கை மின்சார (தனியார்) கம்பனியின் சமூக பொறுப்பு கருத்திட்டமொன்றாக நடைமுறைப்படுத்தலாமென மாண்புமிகு பிரதம அமைச்சரினால் செய்யப்பட்ட அறிவுறுத்தல் அமைச்சரவை யினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. |