• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-08-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஐக்கிய அமெரிக்க குடியரசு அரசாங்கத்துடன் செய்து கொள்ளப்பட்ட இலக்கம் - 383 - 126 மற்றும் இலக்கம் - 383 - 127 கொண்ட அபிவிருத்தி ஒத்துழைப்பு உடன்படிக்கைகள்
- 'சனநாயக நல்லாட்சி மற்றும் சமூக ஒருமைப்பாடு என்பன பொருட்டான ஒத்துழைப்பினை பலப்படுத்தும் நிகழ்ச்சித்திட்டம்' மற்றும் 'நிலைபேறுடைய, முழுமையான பொருளாதார விருத்தியினை உருவாக்கும் நிகழ்ச்சித்திட்டம்' என்பவற்றை நடைமுறைப் படுத்துவதற்கு கொடைகளை பெற்றுக் கொள்வதற்காக 2011 ஆம் ஆண்டில் இலங்கை அரசாங்கம் ஐக்கிய அமெரிக்க குடியரசுடன் இரண்டு ஒத்துழைப்பு உடன்படிக்கைகளை செய்துகொண்டுள்ளன. குறித்த நிகழ்ச்சித்திட்டங்களுக்காக வழங்கப்பட்ட பங்களிப்பினை முறையே 35.95 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களிலிருந்து 47.81 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் வரையும் 33.86 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களிலிருந்து 44.52 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் வரையும் அதிகரித்து நிகழ்ச்சித்திட்டத்தை முடிவுறுத்தும் திகதியை 2022 திசெம்பர் மாதம் 31 ஆம் திகதிவரை நீடித்து நிலைபேறுடைய மற்றும் முழுமையான பொருளாதார அபிவிருத்தியினை ஏற்படுத்தும் நிகழ்ச்சித் திட்டத்தின் அங்கமொன்றாக "நவீன வலுசக்தி சேவை" என்பதை உள்ளடக்கி உரிய உடன்படிக்கைகளை திருத்துவதற்காக நிதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப் பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.