• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-08-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தொழிநுட்ப மற்றும் தொழிற் கல்விக்கான தேசிய கொள்கை - தேசிய கல்வி ஆணைக்குழு
- தொழிநுட்ப மற்றும் தொழிற் கல்வி பயிற்சிக்கான வாய்ப்பினை அதிகரித்தல், மாணவர்களுக்கு பாடசாலைகளிலிருந்து தொழிநுட்ப மற்றும் தொழிற் கல்வி பயிற்சி நிறுவனங்களில் பயிற்சியைப் பெறுவதற்கான வாய்ப்பினை வழங்குதல் என்பன தொழிநுட்ப மற்றும் தொழிற் கல்விக்கான தேசிய கொள்கையின் நோக்கமாகும். கேள்வி நிலவும் மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட்ட துறைகள் சார்பில் கைத்தொழிலின் உயர் பங்களிப்புடன் பல்வேறுபட்ட பயிற்சி வாய்ப்புகளை வழங்குவதற்கும் அந்தந்த துறைகளில் செய்யப்படும் முதலீடுகளில் உச்ச பயனை பெற்றுக் கொள்வதற்கும் பயிற்சி நிறுவனங்களின் செயற்பாட்டு திறன்களை விருத்தி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு இதன்மூலம் வாய்ப்பு கிடைக்கப்பெறும். இந்த நோக்கங்களின் அடிப்படையில் அரசாங்க மற்றும் தனியார் துறைகளில் தொழிநுட்ப மற்றும் தொழிற்கல்வி நிபுணர்களினதும் கைத்தொழிற் துறை சார்ந்தவர்களினதும் பங்களிப்பினையும் பரந்துபட்ட ஆலோசனைகளையும் பெற்றுக் கொண்டு தயாரிக்கப்பட்டு அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட வரைவு தொழிநுட்ப மற்றும் தொழிற் கல்விக்கான தேசிய கொள்கைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.