2019-08-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
நெற் செய்கை நிலங்களில் நீர் மற்றும் சுற்றாடல் முறைமை பற்றிய சருவதேச வலயமைப்பின் (INWEPF) 17 ஆவது வழிகாட்டும் குழுக் கூட்டமும் மாநாடும் - நெற் செய்கை நிலங்களில் சுற்றாடல் முறைமையின் நிலைபேறான தன்மைக்கு கவனம் செலுத்தி முறையான நீர் முகாமைத்துவத்தை பேணுவதனை அடிப்படை நோக்காகக் கொண்டு 'நெற் செய்கை நிலங்களில் நீர் மற்றும் சுற்றாடல் முறைமை பற்றிய சருவதேச வலயமைப்பு ' 2004 ஆம் ஆண்டில் தாபிக்கப்பட்டது. இந்த அமைப்பின் 17 ஆவது வழிகாட்டும் குழுக் கூட்டமும் வருடாந்த மாநாடும் அதன் உறுப்பு நாடுகள் உட்பட முகவர் நிறுவனங்களின் பங்குபற்றுதலுடன் 2020 ஆம் ஆண்டு நவெம்பர் மாதம் கொழும்பில் நடாத்துவதற்கும் இதற்குத் தேவையான நிதி ஏற்பாடுகளை பெற்றுக் கொள்ளும் பொருட்டும் கமத்தொழில், கிராமிய பொருளாதார அலுவல்கள், நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி அமை்சசரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |