2019-08-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
மின்சார தொழினுட்ப தொழிலாளர்களுக்கு அனுமதிப்பத்திர முறை யொன்றை அறிமுகப்படுத்துதல் - உரிய தரத்தில் மின்சார முறைமைகளைத் தாபிப்பதன் மூலம் மின்சார நுகர்வோருக்கு பாதுகாப்பான சேவையினை வழங்குதல் அதேபோன்று மின்சார தொழினுட்ப தொழிலாளர்களுக்கு முறையான தொழில்சார்பாளர்களாக இனங்கண்டு அவர்களுக்கு கூடிய தொழில்வாய்ப்புகளையும் கேள்வியினையும் உருவாக்கும் நோக்கில் மின்சார தொழினுட்ப தொழிலாளர்களுக்கு தொழில் ரீதியிலான அனுமதிப்பத்திர முறையொன்றினை 2019 ஆகஸ்ட் மாதத்திலிருந்து நடைமுறைப்படுத்துவதற்கும் இந்த அனுமதிப்பத்திர முறையினை செயற்படுத்துவதற்கு இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு மற்றும் நிர்மாணிப்பு கைத்தொழில் அபிவிருத்தி நிறுவனம் என்பவற்றுக்கு அதிகாரத்தினை கையளிப்பதற்கும் இதனை மேற்பார்வை செய்வதற்கு உரிய நிறுவனங்களின் உறுப்பினர்களைக் கொண்ட 'மின்சார தொழினுட்ப தொழிலாளர்களுக்கு அனுமதிப்பத்திர முறையினை அமுல்படுத்தல் மற்றும் மீளாய்வு செய்தல் குழு' என்பதனை நியமிப்பதற்குமாக தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வட மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சரினாலும் நிதி அமைச்சரினாலும் வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |