2013-08-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
1969 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க இறக்குமதிகள் மற்றும் ஏற்றுமதிகள் (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல் - கிடைக்கக் கூடியதாகவுள்ள தரவுகளுக்கமைவாக 2012 ஆம் ஆண்டில் 1,467,545 மெற்றிக் தொன் நெல் மேலதிகமாக உள்ளதோடு, இதைவிட சோளம், பயறு, கௌப்பி, சோயா போன்றவற்றின் உற்பத்தியும் அதிகரித்துள்ளன. பசளை, விதை, நீர், கடன் வசதிகள், நவீன உபகரணங்கள், களஞ்சிய வசதிகள் போன்றவை உரிய காலத்தில் வழங்குவதற்கு இயைபுள்ள அதிகாரிகளினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக 1969 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க இறக்குமதிகள் மற்றும் ஏற்றுமதிகள் (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழ் அரிசி இறக்குமதியை மட்டுப்படுத்தி விதிக்கப்பட்டுள்ள கட்டளையை நீக்கும் பொருட்டு 2013‑07‑18 ஆம் திகதியிடப்பட்டதும் 1819/32 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக நிதி, திட்டமிடல் அமைச்சராக அதிதேகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |